Wednesday, May 23, 2012

சரத் பொன்சேகாவிற்கு 7 ஆண்டுகள் வரையில் தேர்தலில் போட்டியிட முடியாது!– சட்ட மா அதிபர்



ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஏழாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு நிபந்தனை அடிப்படையிலான பொது மன்னிப்பே வழங்கப்பட்டுள்ளது.
ஏழாண்டுகள் வரையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. எனினும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
சரத் பொன்சேகா சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட வேண்டிய காலத்திற்கே ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். இதன்படி, அவர் சிறைத் தண்டனை அனுபவித்த நபர் ஒருவராகவே கருதப்பட வேண்டும்.
தப்பிச் சென்ற படைவீரர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடர்ந்தும் நீதிமன்றில் வழக்கொன்று விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார்

மகிந்தவுக்கு அழைப்பு விடுத்ததால், திணறும் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள்


பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் வெறுப்படைந்து போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு வரும் யூன் 4ம் நாள் மகிந்த ராஜபக்ச லண்டன் செல்லவுள்ளார்.
இதுபற்றிய தகவல்கள் வெளியானதும், அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கண்டனக் கடிதங்கள் பல அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்ற லண்டன் சென்ற மகிந்த ராஜபக்ச பாதுகாப்புக் காரணங்களால் உரையாற்றாமலே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி இம்முறை அவருக்குப் பொருத்தமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதனால் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள், இந்தச் சர்ச்சையில் இருந்து எவ்வாறு விடுபடுவதென்று தெரியாமல் திணறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம்

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவனே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவராவார்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலிருந்து கடந்த வருடம் யூன் மாதம் 8ம் திகதி இம்மாணவன் முஸ்லீம் ஒருவரால் ஆசை வார்த்தை கூறி துவிச்சக்கர வண்டியில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்த வான் ஒன்றில் ஏற்றப்பட்டு அவனை யாழ். ஐந்து சந்திப் பகுதிக்கு கொண்டு வந்து அன்றிரவு அவனை மட்டக்களப்பு காத்தான்குடிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு அவனுக்கு சுண்ணத்து பண்ணப்பட்டு தொடர்ந்து அன்வர் என பெயர் மாற்றப்பட்டு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த மூன்று சிறுமியர்களை பாடசாலைக்கு கூட்டிச்செல்வது கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது என வீட்டு வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான்.
இதன் பின்னர் இச்சிறுவன் யாழ்ப்பாணத்திற்கு இவ்வருடம் கொண்டு வரப்பட்டு நடைபாதை கடையொன்றில் வியாபாரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது கடந்த 17ம் திகதி இவரை இனங்கண்டு சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பில் தாயாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
பின்னர் தனது மகனை இனங்கண்ட தாயாரைக்கண்டு மகன் ஏன் மட்டக்களப்பிற்கு வந்தீர்கள் என கண்ணீர்; சிந்தி கதறி அழுதுள்ளார். ஏனெனில் தான் எங்கிருக்கின்றேன் என்பதே அவனுக்கு தெரியவில்லை.
இதன்போது உடனடியாகவே தாயார் சுதாகரித்துச் செயற்பட்டு ஏற்கனவே மானிப்பாய் பொலிஸில் முறையிட்டிருந்ததால் பொலிஸாரிடம் சென்று விடயத்தை தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இரு வர்த்தகர்களையும் உடனடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது சிறுவனை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு தெரிவித்ததோடு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஐந்து சந்தியிலிருந்த வீடொன்றிலிருந்து சிறுவன் கடைசியாக காணாமல் போன அன்று அணிந்திருந்த பாடசாலை சீருடை புத்தகப்பை என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.
இதேவேளை சிறுவன் இன்னமும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லையென்பதோடு சிறுவனை வேலைக்கு அமர்த்திய நடைபாதை வியாபாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் குறித்த சிறுவனை பொலிஸார் விலங்கிட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததை கண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொலிஸாரின் ஒரு பக்க சார்பான இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இச்சிறுவன் காணாமல் போனது தொடர்பில் தாயார் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுவர் நன்னடத்தை பிரிவு என்பவற்றில் முறையிட்டிருந்ததால் அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸாரை வற்புறுத்தி வருகின்றனர்.
முஸ்லீம்கள் மேற்கொண்ட இக்கடத்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு எரிச்சலையும் தோற்றுவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில் வலுக்குறைந்த இளம் பெண் ஒருவரையும் முஸ்லீம்கள் இருவர் கற்பழித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது

Sunday, May 6, 2012

ஆயுதப் போராட்டத்தில் தோற்கடித்தாலும் அரசியல் போராட்டத்தில் தமிழர்களை தோற்கடிக்க முடியாது - மாவை, மனோ

இன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது
அது தமிழர்களைப் பொறுத்தவரை சாதகமானதொன்றாக அமையாவிடினும், அதில் கூறப்பட்டிருக்கின்ற தமிழர் பகுதியின் நில ஆக்கிரமிப்பு, இராணுவ வெளியேற்றம், மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.

“இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்'' கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்!- கலாநிதி சூசை

இரத்தின துவீபம்', “இந்து சமுத்திரத்தின் முத்து' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்' என்ற கிரிமினல் பட்டத்துடன் சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது.
வரலாற்றில் கறைபடிந்த அழிக்க முடியாத அவமானம் இது. வன்னிப் பேரவலம் தொடர்பாக ஐ.நா. நிபுணர் வெளியிட்ட அறிக்கையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இரு ஆவணங்களும் இதற்குத் தக்க சான்றுகள்.
நிபுணர் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஆகவே அறிக்கையும் சாதாரணமானவையல்ல. சனல் 4 இல் வெளியான காணொளியானது தடயவியல் நிபுணர்கள், ஒளி ஒலி வல்லுனர்கள், வெடிபொருள்சார் நிபுணர்கள் ஆகியோன் துல்லியமான பரிசோதனையின் பின்னர் வெளிவந்தவை என இதனைத் தயாரித்த “கெலம் மெக்ரே' கூறுகின்றார்.
உலகத்தின் மனச்சாட்சியையே உலுக்கிய இவை யாவும் போலியானவை என மீண்டும் ஒரு பொய் கூறியுள்ளது இலங்கை அரசு. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் என்பார் இவைகள் அனைத்தும் போலியானவை எனக் கூறுகின்றார். பேராசிரியர் இவ்வாறு பொய் கூறுவது கல்வி உலகிற்கே பெரும் அவமானம்.
மேற்குறித்த அறிக்கையும் தொலைக்காட்சி ஆவணம் பொய் எனில், அறுபது ஆண்டுகளாக, இலங்கை அரசு இலங்கைத் தமிழ்த் தேசியத்திற்கு இழைத்து வந்துள்ள அத்தனை அநியாயங்களும் அட்டூழியங்களும் பொய்.
கிளாலிப் பயணிகள் படுகொலை, மண்டைதீவில் குருநகர் மீனவர் படுகொலை, குமுதினிப் படகு கோரக்கொலை, நவாலி தேவாலயப் படுகொலை, நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை, செஞ்சோலை சிறுவர் படுகொலை இப்படிப் பல படுகொலைகள் இவையாவும் பொய் “நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை' இலங்கை அறுபது வருடங்களாக சர்வதேச சமூகத்தின் முன் கூறிவருகின்ற பொய்மொழிகள் இவை.
கடவுளின் பத்துக்கட்டளைகளில் (Ten Commandments)  ஒன்று கொலை செய்யாதிருப்பாயாக, இன்னொன்று “பொய் சொல்லாதிருப்பாயாக' எனக் கூறுகிறது.
இலங்கை அரசு கொலைகளையும் செய்துவிட்டு சுத்தப் பொய்யும் கூறி கடவுளின் பத்துக் கட்டளைகளையும் மீறியுள்ளது.
தொடர்ச்சியாக செய்துவரும் படுகொலைகளும் பொய்களுக்கும் சேர்த்து இன்று இலங்கைக்கு கிடைத்துள்ள மகத்தான பட்டம் “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்'.
இலட்சக்கணக்கான மக்களை வன்னியில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கி எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காது தாம் விரும்பியவாறு தமது காட்டுத்தர்பார் நாடகத்தை நடத்தி முடித்துள்ளது இலங்கைப் படை. தமது வெறியாட்டம் எவருக்கும் தெரியவாய்ப்பில்லை என்றுதான் அப்போது எண்ணியிருந்தது.
சனல் 4 ஆவணப்படம் வெளிவரத் தொடங்கிய போதுதான் தொலை நுகர்வுத் தொழில்நுட்பம் தமது தலைக்கு மேலே சுழன்று கொண்டிருந்த இரகசியம் தெரியவந்துள்ளது.
இப்போது கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்.
சனல் 4 ஆவணப்படத்தின் தொடர் இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் இனிப்போகப் போகத்தான் வெளிவரப் போகிறது.
மேற்கு ஐரோப்பாவில் ஹிட்லரின் யூதப்படுகொலை, கிழக்கு ஐரோப்பாவில் பொஸ்னிய முஸ்லிம்களின் படுகொலை, ஆபிரிக்காவில் றுவாண்டா குட்சி இனப்படுகொலை, மேற்கு ஆசியா ஈராக்கில் சதாமின் குர்டிஸ் இனப்படுகொலை. தென்கிழக்காசியாவில் பொல்பெட்டின் கம்பூச்சிய படுகொலை இந்த வரிசையில் இப்போது தென் ஆசியாவின் கொலைக்களத்தில் சிங்களத்தின் தமிழர் படுகொலை.
ஹிட்லர், பொல்பொட், சதாம் ஆகியோரின் இழிவுச்சாவுகளை இலங்கை ஆட்சியாளர்களும் நினைவிற் கொள்வது பொருத்தமானது.
முள்ளிவாய்க்காலில் கோரக்கொலை செய்யப்பட்டு புதைகுழியில் போடப்பட்டது தமிழ் தேசியம் மட்டுமல்ல, புத்தரின் அஹிம்சையும், இந்தியாவின் காந்தீயம், அசோக தர்மமாகும். தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் திருந்தி ஆகணும்.
தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இலங்கையில் பௌத்தம் 2 300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள், இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் இங்கு வந்து தமது வரலாற்றை காட்டமுடியாது. தம்புள்ளை விஹாரை உலகத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாக பதிவு செய்யப்படடுள்ளது
இதனை முஸ்லிம்கள் (தம்பிகள்) குழப்பியடிக்க பார்க்கின்றனர்.
அதற்கு இடம்தரமுடியாது. உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவிவருகிறது. ஆனால் பௌத்த அடிப்படைவாதம் எங்கும் இல்லை.
இலங்கையில் 14 மில்லியன் பௌத்தர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் எத்தனை பேர் உள்ளனர்.தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்தர்கள் அதிகமாக உள்ளனர். வத்திக்கானில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளமையால் அது கிறிஸ்தவ நாடு என்று கொள்ளப்படுகிறது.
மத்திய கிழக்கில் சில நாடுகள் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ளமையால் அவை முஸ்லிம் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
எனவே இலங்கையில் வந்து பௌத்த கலாசாரத்துக்கு மத்தியில் தம்முடைய வரலாற்றை முஸ்லிம்கள் நிலைநாட்ட நினைப்பது கொள்ளையாகவே இருக்கும் என்று இனாமலுவே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், குறித்த பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என்று கூறுகிறார். ஆனால் இலங்கையில் இரண்டாவது பிரஜையாக உள்ள பிரதமர் டி எம் ஜயரட்ன, பள்ளிவாசலுக்கு வேறு இடம் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தேரரிடம் கேட்டபோதும், ஜனக பண்டார தென்னக்கோன் ஒரு பொலிஸ்காரராக இருந்தவர். எனவே அவர் தமது பாணியில் பேசுகிறார். அவர் நாடாளுமன்றத்துக்கு அவருடைய தந்தையின் வாக்குகளின் மூலமே தெரிவானார் எனவே அவரின் பேச்சை பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்